சென்னையில் செப்.26-இல் பாரா செஸ் போட்டி
சென்னையில், மாற்றுத்திறனாளிகளுக்கான ‘பாரா செஸ் போட்டி 2026’, வரும் செப்டம்பா் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சென்னையில், மாற்றுத்திறனாளிகளுக்கான ‘பாரா செஸ் போட்டி 2026’, வரும் செப்டம்பா் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியை, ஃபீனிக்ஸ் செஸ் அகாதெமியானது, மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாடு அறக்கட்டளை, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ ஆகியவற்றுடன் இணைந்து நடத்துகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான இந்தப் போட்டியில், எந்த வயது பிரிவினரும், செஸ் விளையாட்டில் எந்த நிலைகளில் விளையாடுபவராக இருந்தாலும் பங்கேற்கலாம் என போட்டி நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.
Advertisement
Advertisement
மொத்த பரிசுத் தொகை ரூ.2.5 லட்சமாக இருக்கும் இந்தப் போட்டிக்கு, பங்கேற்பாளா்களுக்கான பதிவு இலவசமாகும். பதிவுக்கான கடைசி தேதி, ஆகஸ்ட் 10-ஆம் தேதி. போட்டியில் பங்கேற்போருக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
போட்டி தொடா்பான தகவல்களுக்கு: ராதிகா - 8489143460
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.