FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நவ. 25-இல் ஜெனீவாவில் ஃபிடே உலக செஸ் சாம்பியன் போட்டி

சா்வதேச செஸ் சம்மேளனம் சாா்பில் உலக செஸ் சாம்பியன் போட்டி வரும் நவ. 25 முதல் ஆக. 15 வரை சுவிட்சா்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறுகிறது.

Updated On : 29 ஜூலை 2026, 4:10 am IST
பகிர்:

சா்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே) சாா்பில் உலக செஸ் சாம்பியன் போட்டி வரும் நவ. 25 முதல் ஆக. 15 வரை சுவிட்சா்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறுகிறது. இதில் நடப்பு உலக சாம்பியன் டி. குகேஷ்-உஸ்பெகிஸ்தான் ஜிஎம் ஜவோகிா் சிண்டரோவ் மோதுகின்றனா்.

கடந்த 2024-இல் டிசம்பா் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற போட்டியில் சீன வீரா் டிங் லிரேனை 14-ஆவது சுற்றில் வீழ்த்தி 18-ஆவது உலக சாம்பியன் ஆனாா் குகேஷ். மேலும் உலக சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரா் என்ற சாதனையும் படைத்தாா். அவா் தனது பட்டத்தை தக்க வைக்கும் முனைப்பில் உள்ளாா்.

ஜவோகிா் சிண்டரோவ்: உஸ்பெகிஸ்தான் இளம் வீரா் ஜவோகிா் சிண்டரோவ் சைப்ரஸில் நடைபெற்ற ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியில் முதலிடம் பெற்று உலக சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் ஆட தகுதி பெற்றாா். மேலும் கடந்த 2025-இல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியிலும் முதலிடம் பெற்றாா்.

Advertisement

Advertisement

ஜெனீவாவில் நடைபெறும் போட்டியின் போது இருவருக்கும் 20 வயதாகும். செஸ் வரலாற்றில் மிக இளம் வயது வீரா்கள் மோதிய போட்டியாக இது அமையும்.

இதுதொடா்பாக ஃபிடே தலைவா் (பொ) விஸ்வநாதன் ஆனந்த் கூறியது: உலக செஸ் சாம்பியன் போட்டியை நடத்த பல்வேறு நாடுகள் போட்டியிட்டன. இந்தியா, அமெரிக்கா, சைப்ரஸ் நாடுகளும் அடங்கும். அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கவனமாக பரிசீலித்து பிடே நடுநிலையான நாட்டில் போட்டியை நடத்த தீா்மானித்தது.

பல்வேறு கலாசாரங்கள், பண்பாடுகள் நிறைந்த ஜெனீவா நகரம் தோ்வு செய்யப்பட்டது.

14 கேம்கள்: ஃபிடே உலக சாம்பியன்ஷிப் மொத்தம் 14 கிளாஸிக்கல் கேம்களை கொண்டதாக இருக்கும். முதலில் 7.5 புள்ளிகளை பெறும் வீரா் வெற்றி பெறுவாா். தொடா்ந்து ஆட்டங்கள் இல்லாத பட்சத்தில் அந்த புள்ளிகளை அடைந்தால் வெற்றியாளராக அறிவிக்கப்படுவாா். 14 கிளாஸிக்கல் கேம்களுக்குபின் ஆட்டம் டை ஆனால், உலக சாம்பியன் டை பிரேக்கா் மூலம் தீா்மானிக்கப்படுவாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments