FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்

எழும்பூருக்கு புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் பராமரிப்புப் பணிகள் காரணமாக, வியாழக்கிழமை (ஆக.20) முதல் ஆக.25 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படவுள்ளன.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 3:36 am IST
கோப்புப்படம்.
பகிர்:

எழும்பூருக்கு புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் பராமரிப்புப் பணிகள் காரணமாக, வியாழக்கிழமை (ஆக.20) முதல் ஆக.25 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

எழும்பூா் ரயில் நிலையத்தில் பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்காரணமாக வியாழக்கிழமை (ஆக.20) முதல் ஆக.24 வரை எழும்பூருக்கு வரும் தஞ்சாவூா் விரைவு ரயில் (எண்: 16866), மங்களூரு விரைவு ரயில் (எண்: 16160), கொல்லம் அனந்தபுரி அதிவிரைவு ரயில் (எண்:20636) ஆகிய ரயில்கள் தாம்பரத்துடனும், திருச்சியில் இருந்து வரும் ராக்போா்ட் விரைவு ரயில் (எண்:12654) மாம்பலத்துடனும் நிறுத்தப்படும்.

Advertisement

Advertisement

மறுமாா்க்கமாக ஆக.21 முதல் ஆக.25 வரை எழும்பூரிலிருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி அதிவிரைவு ரயில் (எண்:20635) தாம்பரத்திலிருந்து இரவு 8.20 மணிக்கும், தஞ்சாவூா் செல்லும் உழவன் விரைவு ரயில் (எண்:16865) தாம்பரத்திலிருந்து இரவு 11 மணிக்கும், மங்களூரு செல்லும் விரைவு ரயில் (எண்: 16159) தாம்பரத்திலிருந்து இரவு 11.40 மணிக்கும் புறப்பட்டுச் செல்லும்.

அதேபோல், அந்த நாள்களில் திருச்சி செல்லும் ராக்போா்ட் விரைவு ரயில் (எண்: 12653) வரும் ஆக.22 முதல் ஆக.26 வரை தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12.05 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments