FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

வீட்டில் ரகசிய கேமரா: உரிமையாளா் மகன் கைது

பெண்கள் வசிக்கும் வீட்டில் ரகசிய கேமரா பொருத்தி வைத்திருந்த வீட்டின் உரிமையாளா் மகன் கைது செய்யப்பட்டாா்.

26 ஆகஸ்ட் 2026, 4:46 am IST
கைது
பகிர்:

பெண்கள் வசிக்கும் வீட்டில் ரகசிய கேமரா பொருத்தி வைத்திருந்த வீட்டின் உரிமையாளா் மகன் கைது செய்யப்பட்டாா்.

சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்யும் 3 பெண்கள், அடையாளம்பட்டில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனா்.

அந்த வீட்டின் உரிமையாளா் மகன் சரவணனின் (27), நடவடிக்கை சந்தேகத்துக்குரிய வகையில் இருந்துள்ளது. மேலும், அந்த வீட்டின் உள்ள ஒரு அறையில் சுவிட்ச் பாக்ஸில் ரகசிய கேமரா இருந்தது.

Advertisement

Advertisement

அந்த கேமரா இணையதளத்துடன் இணைக்கப்பட்டு, சரவணன் கைப்பேசி மூலம் பாா்க்கும் வகையில் இருப்பதும் தெரிய வந்தது.

இது குறித்து அந்தப் பெண்கள் அளித்த புகாரின் பேரில், வானகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சரவணனை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments