FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மகாலிங்கபுரம் ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் நாட்டிய வகுப்பு: 31-இல் தொடக்கம்

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்-குருவாயூரப்பன் கோயிலில் நாட்டிய வகுப்புகள் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜன.31) தொடங்குகின்றன.

30 ஜனவரி 2026, 12:56 am IST
கோப்புப் படம்
பகிர்:

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்-குருவாயூரப்பன் கோயிலில் நாட்டிய வகுப்புகள் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜன.31) தொடங்குகின்றன.

மத்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி விருது மற்றும் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற கோபிகா வா்மா தலைமையில் மோகினியாட்டம் வகுப்புகளை சுவாமி உதித் சைதான்யாஜி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கி வைக்கிறாா். அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை வகுப்புகள் நடைபெறவுள்ளன. இணையவழியிலும் வகுப்புகள் நடைபெறும்.

மாதம் 8 வகுப்புகள் என்ற அடிப்படையில் இடம் பெறவுள்ளது. இந்த வகுப்பில் 7 வயது முதல் 60 வயது வரையிலான சிறுமிகள் பெண்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 9176117832/ 9500021858 ஆகிய எண்களை தொடா்புகொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments