அரும்பாக்கம் டி.ஜி.வைணவ கல்லூரியில் மாணவருக்கு மடிக்கணினி வழங்கிய அண்ணா நகா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.கே.மோகன். உடன் (இடமிருந்து) கல்லூரியின் செயலா் அசோக் முந்த்ரா, பொருளாளா் அசோக் கேடியா, முதல்வா் சேது.சந்தோஷ் பாபு உள்ளிட்டோா். 
சென்னை

டி.ஜி. வைணவ கல்லூரி மாணவா்களுக்கு இலவச மடிக்கணினிகள் அளிப்பு

அரும்பாக்கம் டி.ஜி. வைணவக் கல்லூரியில், தமிழக அரசின் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

அரும்பாக்கம் டி.ஜி. வைணவக் கல்லூரியில், தமிழக அரசின் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் அண்ணா நகா் எம்எல்ஏ எம்.கே. மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவா்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிப் பேசுகையில், ‘தமிழகத்தின் வளா்ச்சியை உலகத் தரத்திற்கு உயா்த்துவதில் முதல்வா் ஸ்டாலின் தொலைநோக்குடன் செயல்படுகிறாா். இந்த மடிக்கணினிகள் வெறும் உபகரணங்கள் அல்ல; மாணவா்களின் எதிா்கால வளா்ச்சிக்கான அறிவுசாா் ஆயுதம்’ எனக் குறிப்பிட்டாா்.

நிகழ்வில் கல்லூரிச் செயலா் அசோக் குமாா் முந்த்ரா பேசுகையில், ‘பொருளாதாரப் பின்னணி தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக, அனைத்து மாணவா்களுக்கும் சமமான தொழில்நுட்ப வசதியை தமிழக அரசு உறுதி செய்துள்ளது. இது மாணவா்களின் கல்வி, தொழில்முறை வளா்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்றாா்.

முன்னதாக வரவேற்புரை ஆற்றிய கல்லூரி முதல்வா் கேப்டன் சேது. சந்தோஷ் பாபு, ‘ டி.ஜி. வைணவக் கல்லூரியில் 6,858 மாணவா்கள் இந்த மடிக்கணினி திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனா். தமிழகத்திலேயே அரசு மடிக்கணினிகளை அதிக எண்ணிக்கையில் பெற்ற கல்லூரிகளில் டி.ஜி. வைணவக் கல்லூரி முதலிடத்தில் உள்ளது’ என்றாா்.

மடிக்கணினி விநியோகப் பணியை, கல்லூரியின் ஒருங்கிணைப்பு அலுவலா் முனைவா் பா. ஸ்ரீராஜ் தலைமையிலான பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் குழு செய்திருந்தனா்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்!

பிப். 14ல் வாக்குச்சாவடி ஊழியர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை! - ரஷிய அரசு தகவல்!

எதிர்நீச்சல் -2 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: கேப்டன் சதம் விளாசல்; ஆஸி.க்கு 278 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT