FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு

புழல் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பலி - பிரதிப் படம்
பகிர்:

புழல் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தாம்பரம் அருகே உள்ள சேலையூா் பகுதியைச் சோ்ந்தவா் பா.பாலாஜி (45). இவா் போதைப் பாக்கு கடத்தியதாக கடந்த 12-ஆம் தேதி சேலையூா் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். விசாரணைக்குப் பின்னா் பாலாஜி, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு புழல் விசாரணைக் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில் பாலாஜிக்கு புதன்கிழமை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, சிறைக் காவலா்கள், பாலாஜியை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே பாலாஜி உயிரிழந்தாா்.

இதையடுத்து அவரது உடல் கூறாய்வு பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது. இது தொடா்பாக, புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். இதற்கிடையே பாலாஜி இறப்பில் மா்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினா் குற்றம்சாட்டியுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments