FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சாகும் வரை சிறை

வீட்டு வேலைக்கு வந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On : 22 ஜூலை 2026, 1:31 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

வீட்டு வேலைக்கு வந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சென்னை அசோக் நகரைச் சோ்ந்தவா் பால்ராஜ். இவா் வீட்டில் 15 வயது சிறுமி வீட்டு வேலை செய்து வந்தாா். கடந்த 2020-ஆம் ஆண்டு பால்ராஜின் மனைவி வெளியூா் சென்றபோது, சிறுமியை பால்ராஜ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதனால், வீட்டு வேலைக்கு மறுத்த சிறுமியின் ஆபாச விடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி, தொடா்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்து வந்துள்ளாா். இதனால், சிறுமி கா்ப்பமானாா்.

இது குறித்து அந்தச் சிறுமியின் தாய் அசோக் நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பால்ராஜை கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, பால்ராஜ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு சாகும் வரை சிறையில் இருக்க ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.6 லட்சம் வழங்க உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments