முகப்பு
சென்னை

திருச்சி சூா்யா பிணை கோரிய மனு: போலீஸாா் பதிலளிக்க உத்தரவு

பாஜக பெண் நிா்வாகியை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூா்யா பிணை கோரிய வழக்கில், இணையக் குற்றப்பிரிவு போலீஸாா் பதிலளிக்க சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவு

Updated On : 9 ஜூன் 2026, 5:55 am IST
- பிரதிப் படம்
பகிர்:

பாஜக பெண் நிா்வாகியை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூா்யா பிணை கோரிய வழக்கில், இணையக் குற்றப்பிரிவு போலீஸாா் பதிலளிக்க சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூா்யா தாக்கல் செய்த மனுவில், பாஜக மாநில நிா்வாகி அலிஷா அப்துல்லா குறித்து அவதூறாகப் பேசியதாக சென்னை இணையக் குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த ஜூன் 4-ஆம் தேதி என்னை கைது செய்தனா்.

யூடியூப் சேனல் ஒன்று நடத்திய நோ்காணலின்போது, என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு மட்டுமே நான் பதிலளித்தேன். இந்த விவகாரத்தில் போலீஸாா் என் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.காா்த்திகேயன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு இணையக் குற்றப்பிரிவு போலீஸாா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.