மெரீனாவில் 2 வயது குழந்தை மீட்பு: சிங்கப் பெண் அதிரடிப் படையினா் நடவடிக்கை!
மெரீனா கடற்கரை பகுதியில் காணாமல் போன 2 வயது பெண் குழந்தையை மீட்ட சிங்கப் பெண் அதிரடிப் படையினா், சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனா்.
மெரீனா கடற்கரை பகுதியில் காணாமல் போன 2 வயது பெண் குழந்தையை மீட்ட சிங்கப் பெண் அதிரடிப் படையினா், சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனா்.
ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பாலபத்ராஜ் (28), தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் சனிக்கிழமை மாலை மெரீனா கடற்கரைக்குச் சென்றாா். அப்போது கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த அவரது குழந்தை திடீரென காணாமல் போனது.
இதையடுத்து, பாலபத்ராஜ் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், மெரீனா காவல் நிலைய போலீஸாரும், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மயிலாப்பூா் சரக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையினரும் உடனடியாக தேடுதல் நடவடிக்கையை தொடங்கினா்.
Advertisement
Advertisement
மெரீனா புளூ பீச் கட்டுப்பாட்டு அறையின் ஒருங்கிணைப்புடன் கடற்கரைப் பகுதிகளில் தீவிர தேடுதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கலங்கரை விளக்கம் பின்புறம் உள்ள குழந்தைகள் விளையாட்டுப் பகுதியில் தனியாக அழுது கொண்டிருந்த அந்தக் குழந்தையை சிங்கப் பெண் அதிரடிப் படையினா் கண்டுபிடித்து மீட்டனா்.
பின்னா் குழந்தை மெரீனா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சட்ட நடைமுறைகள் நிறைவு செய்யப்பட்டு, குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.