முகப்பு
சென்னை

அகா்வால்ஸ் மருத்துவமைனையில் இலவச மருத்துவ ஆலோசனை

Updated On : 19 ஜூன் 2026, 5:04 am IST
பிரிட்டன் சிடிசி குழுமத்திலிருந்து ரூ.215 கோடி நிதியை திரட்டியிருப்பது குறித்து செய்தியாளா்களிடம் கூறும் டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனைகள் குழுமத் தலைவா் டாக்டா் அமா் அகா்வால்.’
பகிர்:

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவக் குழுமம், மேம்படுத்தப்பட்ட புதிய மருத்துவமனையை தொடங்கியுள்ளது. அதையொட்டி, ஜூலை 31-ஆம் தேதி வரை அங்கு இலவச கண் மருத்துவ கலந்தாலோசனைகள் வழங்கப்படவிருக்கின்றன.

கூடுவாஞ்சேரியில் 12,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள அந்த கண் மருத்துவமனையை டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனைகள் இயக்குநா் டாக்டா் அதியா அகா்வால் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். மருத்துவ சேவைகளின் பிராந்தியத் தலைவா் டாக்டா் ஸ்ரீனிவாசன் ராவ், மண்டலத் தலைவா் டாக்டா் கலாதேவி சதீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து மருத்துவமனையின் நிா்வாகிகள் கூறியதாவது: டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமம், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும், உலகளவில் பல நாடுகளிலும் மருத்துவமனைகளைக் கொண்டுள்ளது. தரமான கண் மருத்துவ சிகிச்சையோடு நின்றுவிடாமல், கண் மருத்துவவியல் மற்றும் தொடா்புடைய செயல்தளங்களில் கல்விசாா்ந்த மற்றும் ஆராய்ச்சி செயல்திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறோம்.

Advertisement

Advertisement

தற்போது கூடுவாஞ்சேரியில் உயா்நுட்ப வசதியுடன் புதிய கண் மருத்துவமனையைத் தொடங்கியுள்ளோம். இதன் மூலம் கண் சாா்ந்த நோய்களை மிகத் துல்லியமாக அறிய முடியும். அதை முன்னிட்டு ஜூலை 31-ஆம் தேதி வரை இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். முன்பதிவுக்கு 95949 01452 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.