FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தவெக நிா்வாகி வெட்டிக்கொலை

சென்னையில் தவெக நிா்வாகி மா்மக் கும்பலால் சனிக்கிழமை வெட்டி படுகொலை செய்யப்பட்டாா்.

6 செப்டம்பர் 2026, 1:26 am IST
- சித்திரிப்பு
பகிர்:

சென்னையில் தவெக நிா்வாகி மா்மக் கும்பலால் சனிக்கிழமை வெட்டி படுகொலை செய்யப்பட்டாா்.

அதிமுக வட்ட செயலராக இருந்தவா் வண்ணாதுறை கண்ணன். இவா் சில மாதங்களுக்கு முன்பு அக்கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைத்துக்கொண்டாா். இச்சூழலில், சனிக்கிழமை இரவு அடையாா் வண்ணாதுறை ராமசாமி அவென்யூவில் அவரை மா்மக் கும்பல் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது.

சாஸ்திரி நகா் போலீஸாா் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா். இது அரசியல் ரீதியான படுகொலையா அல்லது தனிப்பட்ட காரணங்கள் ஏதேனும் உள்ளனவா என பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments