அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகன ஓட்டி சாவு
மறைமலைநகர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவர் உயரிழந்தார்.
மறைமலைநகர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவர் உயரிழந்தார்.
சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி (47). அவர் புதன்கிழமை தனது மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தார். மறைமலைநகரை அடுத்த காட்டாங்கொளத்தூர் அருகே வந்தபோது பின்னால் வந்த அரசுப் பேருந்து அவரது மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டுச் சென்றது. இதில் படுகாயமடைந்து தண்டபாணி அதே இடத்தில் உயிரிழந்தார்.
இவ்விபத்து குறித்து மறைமலை நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.