காலமானார் ராஜு
செங்கல்பட்டு நகர வளர்ச்சி மன்றச் செயலாளர் ராஜு (87) புதன்கிழமை காலமானார்.
செங்கல்பட்டு நகர வளர்ச்சி மன்றச் செயலாளர் ராஜு (87) புதன்கிழமை காலமானார்.
செங்கல்பட்டு அழகேசநகரைச் சேர்ந்த இவர், பொதுப் பணித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன் பின் இவர், செங்கல்பட்டு நகர வளர்ச்சி மன்றத்தின் செயலாளராக இருந்து பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து அரசு அதிகாரிகளிடம் பேசி ஆலோசனைகள் வழங்கி வந்தார்.
முன்னாள் நகர்மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், நகராட்சி ஆணையர், செங்கல்பட்டு நகர வளர்ச்சி மன்ற நிர்வாகிகள் என பலரும் ராஜுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.