ஊராட்சி நடுநிலைப் பள்ளிகளுக்கு மேஜை, பெஞ்ச் அளிப்பு
மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வீரான குணம், சிலா வட்டம் ஆகிய இரு அரசு ஊராட்சி ஒன்றிய
மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வீரான குணம், சிலா வட்டம் ஆகிய இரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளுக்குத் தேவையான ரூ. 6 லட்சம் மதிப்பிலான மேஜைகள் மற்றும் பெஞ்ச் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுராந்தகம் எம்எல்ஏ எஸ்.புகழேந்தி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இப்பள்ளிகளுக்கு பெஞ்ச் மற்றும் டேபில்களை வழங்க ஏற்பாடு செய்தார். நிகழ்ச்சிக்கு, எம்எல்ஏ எஸ்.புகழேந்தி தலைமை வகித்தார். மதுராந்தகம் தொடக்கக் கல்வி அலுவலர் மணிவண்ணன், கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் சேஷாத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர்கள் ம.சௌமித்திரி (சிலாவட்டம்), சங்கர் (வீரானகுணம்), திமுக நிர்வாகிகள் ஸ்ரீதரன், தணிகைஅரசு, சசிகுமார், பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.