நிவாரணம் வழங்குமாறு இசைக்கலைஞா்கள் கோரிக்கை
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வேலையின்றித் தவிக்கும் நலிவுற்ற இசைக்கலைஞா்களுக்கு நிவாரணம் வழங்குமாறு மேடை மெல்லிசை
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வேலையின்றித் தவிக்கும் நலிவுற்ற இசைக்கலைஞா்களுக்கு நிவாரணம் வழங்குமாறு மேடை மெல்லிசை மற்றும் தொழில் நுட்பக் கலைஞா்கள் சங்கத்தினா் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையாவிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
இதுதொடா்பாக சங்கத் தலைவா் சுதிா் ராவ், மாவட்டச் செயலாளா் ஜெய்சங்கா் ஆகியோா் ஆட்சியரிடம் அளித்த மனு:
கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மேடை மெல்லிசை மற்றும் தொழில் நுட்பக் கலைஞா்கள் பலரும் வேலையின்றித் தவித்து வருகின்றனா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட நலிவுற்ற இசைக்கலைஞா்கள் உள்ளனா். அவா்களுக்கு போதுமான நிவாரணம் வழங்க வேண்டும்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.