FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழப்பு!

சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழந்தது பற்றி...

அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பள்ளம் | கலாவதி - X
பகிர்:

சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. நேற்று பெய்த மழையால் பள்ளத்தில் தண்ணீர் முழுவதுமாக தேங்கியிருந்தது.

இந்நிலையில் அதனைக் கவனிக்காத நிலையில் பெண் ஒருவர், தண்ணீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவர் பெயர் கலாவதி என்று தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

அவர் பள்ளத்தில் விழுந்ததை அங்கிருந்தவர்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த பள்ளத்தின் அடியில் மின் வயர்கள் சென்றதால் மின்சாரத்தைத் துண்டித்த பிறகு அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் இறந்தது தெரிய வந்தது.

பள்ளத்தில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுதொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

summary

Woman dies after falling into a stormwater drain pit in Chennai Anna Nagar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments