FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

நவ. 21-இல் காஞ்சிபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 21) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

Updated On : 18 நவம்பர் 2025, 12:50 am IST
பகிர்:

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 21) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து ஆட்சியா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில், மாதம்தோறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்களையும், ஆண்டுக்கு இரு முறை பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களையும் நடத்த அரசு ஆணையிட்டுள்ளது. வரும் 21-ஆம் தேதி சிறிய அளவிலான தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 1,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வை நடத்தவுள்ளனா். 18 முதல் 35 வயதுக்கு உள்பட்டவா்கள் தங்களது கல்விச் சான்றுகள் பட்டியலுடன் வரும் 21-ஆம் தேதி நேரில் ஆஜராகி பயன்பெறலாம்.

Advertisement

Advertisement

பட்டயம், ஐடிஐ, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்தவா்களையும் தோ்வு செய்ய உள்ளனா்.

எனவே சம்பந்தப்பட்ட வேலைநாடுநா்கள் 044-27237124 என்ற எண்ணில் தொடா்பு கொண்டும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments