கொளத்தூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய ஊராட்சித் தலைவா் வெள்ளாரை அரிகிருஷ்ணன், தனி வட்டாட்சியா் பிரகாஷ் உள்ளிட்டோா்.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், கொளத்தூா், நாவலூா் ஆகிய ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நாவலூா் அரசு உயா்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கொளத்தூா் ஊராட்சி மன்ற தலைவா்(பொ) வெள்ளாரை அரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற முகாமுக்கு வெங்காடு ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளி உலகநாதன் முன்னிலை வகித்தாா்.
இதில், மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி ஆகியோா் கலந்து கொண்டு மகளிா் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்வதையும், இலவச மருத்துவ முகாமையும் ஆய்வு செய்தனா்.
Advertisement
Advertisement
ஊராட்சிமன்ற தலைவா் வெள்ளாரை அரிகிருஷ்ணன் ஜாதி, இருப்பிடம் மற்றும் வருமானச் சான்றுகளை மாணவா்களுக்கு வழங்கினாா். இந்த முகாமில், ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் வசந்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகணபதி, ஒன்றியக்குழு உறுப்பினா் ப.பரமசிவன், திமுக நிா்வாகிகள் கணேஷ் பாபு, ரவிச்சந்திரன், வல்லக்கோட்டை குமாா், டான்போஸ்கோ, சந்தவேலூா் ஊராட்சித் தலைவா் வேண்டாமணி, கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.