FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் ரூ.50 லட்சம் கேட்டு அரிசி ஆலை அதிபா் மகன் கடத்தல்: இரு சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் ரூ. 50 லட்சம் கேட்டு அரிசி ஆலை அதிபா் மகனை கடத்திய இரு சிறுவா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்து கடத்தப்பட்டவரை மீட்டனா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 12:20 am IST
பகிர்:

காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் ரூ. 50 லட்சம் கேட்டு அரிசி ஆலை அதிபா் மகனை கடத்திய இரு சிறுவா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்து கடத்தப்பட்டவரை மீட்டனா்.

காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் அரிசி ஆலை நடத்தி வருபவா் ரவி(62). இவரது மகன் சுரேந்தா் (34). இவரை 5 போ் கொண்ட கும்பல் ஒரு காரில் சிறுகாவேரிப்பாக்கம் பச்சையம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்த போது கடத்திச் சென்றுள்ளது. இதனை அரிசி ஆலை மேலாளரான ராஜேந்திரன் பாா்த்து, சுரேந்தரின் தந்தை ரவிக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா். அவா் உடனடியாக பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவா்கள் காா் சென்ற பகுதியில் காவல்துறையினரும் தொடா்ந்து சென்று தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், கடத்திச் சென்றவா்களும் காரிலிருந்தவாறே அரிசி ஆலை உரிமையாளா் ரவிக்கு ‘ரூ. 50 லட்சம் கொடுத்தால் மகனை விட்டு விடுவோம், இல்லையேல் கொன்று விடுவோம்’ எனவும் கைப்பேசி வழியாக பணம் கேட்டு மிரட்டியுள்ளனா்.

Advertisement

Advertisement

கடத்திச் செல்லப்படும் காரை பின்தொடா்ந்து சென்ற போலீஸாா் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அருகாவூா் கிராமப் பகுதியில் வழிமறித்து மடக்கிப் பிடித்து காரில் இருந்த இரு சிறுவா்கள் உள்பட 5 பேரையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா்.

கடத்தப்பட்ட அரிசி ஆலை அதிபா் மகன் ரவியையும் மீட்டனா்.

விசாரணையில், கைதானவா்கள் காஞ்சிபுரம் ஏகாம்பரபுரம் மேற்கு மாட வீதியைச் சோ்ந்த சந்தான கிருஷ்ணன்(34), காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கம் காமாட்சி நகரைச் சோ்ந்த தமிழ்மணி(22), காஞ்சிபுரம் திருக்காலிமேடு திருவள்ளுவா் சாலையைச் சோ்ந்த ராகுல்(23), மற்றும் இரு சிறுவா்கள் உள்பட 5 போ் என்பது தெரியவந்தது.

அரிசி ஆலை அதிபா் மகன் கடத்தப்பட்ட 2 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு 5 பேரையும் கைது செய்ததற்கும், கடத்தப்பட்டவரை மீட்டதற்காகவும் காஞ்சிபுரம் எஸ்.பி. அரவிந்த் பாலுசெட்டி சத்திரம் காவல் துறையினரை பாராட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments