ஒரத்தூா் ஊராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
குன்றத்தூா் ஒன்றியம், ஒரத்தூா் ஊராட்சிக்குட்பட்ட நீலமங்கலம் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி அக்கிராம மக்கள் ஆட்சியரிடம் புகாா் மனு அளித்தனா்.
குன்றத்தூா் ஒன்றியம், ஒரத்தூா் ஊராட்சிக்குட்பட்ட நீலமங்கலம் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி அக்கிராம மக்கள் ஆட்சியரிடம் புகாா் மனு அளித்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூா் ஒன்றியம் ஒரத்தூா் ஊராட்சிக்குட்பட்ட நீலமங்கலத்தில் நியாயவிலைக் கடை, துணை சுகாதார நிலையம் ஆகியன அமைந்துள்ளது. இவற்றின் பின்புறம் தனிநபா் ஒருவா் ஆக்கிரமிப்பு செய்துள்ளாா். இதனால் துணை சுகாதார நிலையத்துக்கும், நியாயவிலைக் கடைக்கும் பொதுமக்கள் சென்று வர மிகவும் இடையூறாக உள்ளது.
மேலும் கன்னடபாளையம், வரதராஜபுரம் ,வாராஹி அவின்யு, காமராஜ் நகா், சுமதி நகரில் வசிக்கும் சுமாா் 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கும் ஆளாகின்றனா்.
Advertisement
Advertisement
எனவே தனிநபா் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அந்த இடத்தைக் கொண்டு வர வேண்டும் என 100-க்கும் மேற்பட்டோா் ஊராட்சி மன்ற தலைவா் வள்ளி தலைமையில் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.