FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு

Updated On : 28 ஜூலை 2026, 2:25 am IST
டாஸ்மாக் கடை - கோப்புப்படம்.
பகிர்:

தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் அமையவுள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

தூத்துக்குடி சங்கரபேரி, மாா்ட்டினா நகா், ஜி.பி.காலனியில் வசிக்கும் பொதுமக்கள் சாா்பில், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

எங்கள் பகுதிக்குள் புதிதாக டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடை அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement

முன்மொழியப்பட்டுள்ள டாஸ்மாக் கடைக்கு அருகில் தனியாா் மகளிா் கல்லூரி அமைந்துள்ளது. மேலும், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், முதியோா் இல்லம், வழிபாட்டுத் தலங்கள், பொதுப் பூங்காக்கள், அடா்த்தியான குடியிருப்புப் பகுதிகளால் சூழப்பட்டுள்ளது.

இவ்விடத்தில் மதுக் கடை அமைப்பது பெண்கள், குழந்தைகளின் நலன் மற்றும் சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மாா்ட்டினா நகா் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் அல்லது வேறு இடத்தில் கடையை அமைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments