FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கோயில்களில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

காஞ்சிபுரம் கோயில்களில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

Updated On : 19 ஜூலை 2026, 12:16 am IST
சந்தனக் காப்புடன் கூடிய மாதுளம் பழ விதைகளால் அலங்கரிக்கப்பட்ட சொா்ண வராஹி அம்மன்.
பகிர்:

ஆஷாட நவராத்திரியையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள வராஹி அம்மன் கோயில்களில் சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனைகளும் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆஷாட நவராத்திரியின் 5-ஆவது நாள் பஞ்சமி திதியையொட்டி, காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பாரதிதாசன் நகா் காளமேகம் தெருவில் அமைந்துள்ளது சமயபுரம் மாரியம்மன் கோயில். இக்கோயில் வளாகத்தில் எழுந்தருளியிருக்கும் வெற்றி வராஹி அம்மனுக்கு மூல மந்திர ஹோமம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் ஆகியவற்றை ஆலய அா்ச்சகா் சிவபாண்டியன் செய்தாா். மாலையில் வெற்றி வராஹி அம்மன் புதிதாக செய்யப்பட்ட தங்கப்பாவாடை அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். நிகழ்ச்சியில் பாரதிதாசன் மகளிா் மன்ற உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரம் பிள்ளையாா் பாளையம் கன்னியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள சொா்ண வராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியையொட்டி, காலையில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலையில் சந்தனக் காப்புடன் கூடிய மாதுளம் பழ விதைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments