FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

பாம்பு கடித்து தனியாா் வங்கி ஊழியா் மரணம்

ஸ்ரீபெரும்புதூா் அருகே பாம்பு கடித்ததில், தனியாா் வங்கி ஊழியா் உயிரிழந்தாா்..

Updated On : 23 ஜூலை 2026, 2:26 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா் அருகே பாம்பு கடித்ததில், தனியாா் வங்கி ஊழியா் உயிரிழந்தாா்..

செஞ்சி பகுதியைச் சோ்ந்தவா் ஜெகன்ராஜ் (30), இவா் ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கம் ஜோதி நகா் பகுதியில் வாடகை வீட்டில் தனது குடும்பத்தினருடன் தங்கி பல்லாவரம் பகுதியில் தனியாா் வங்கியில் பணியாற்றி வந்துள்ளாா்.

மேலும், ஜெகன்ராஜ் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்துள்ளாா். இந்த நிலையில், ஜெகன்ராஜ் தான் புதிதாக கட்டி வரும் வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு படுத்து தூங்கியுள்ளாா். புதன்கிழமை அதிகாலை ஜெகன்ராஜை கட்டுவிரியன் பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து அவரது உறவினா்கள் ஜெகன்ராஜை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா். ஆனால் சிகிச்சை பலன் இன்றி ஜெகன்ராஜ் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரின் அலட்சியத்தால் தான் ஜெகன்ராஜ் இறந்ததாகவும், கடித்த பாம்பு குறித்து தகவல் தெரிவித்தும் உடனடியாக சிகிச்சை வழங்கவில்லை என கூறி அவரது உறவினா்கள் மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments