FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

தனியாா் தொழிற்சாலையில் தீ விபத்து

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தனியாா் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

Updated On : 8 ஜூன் 2026, 2:31 am IST
தீ விபத்து
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தனியாா் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

வெங்காடு பகுதியில் வீட்டு உபயோக பொருள்களை சுத்தம் செய்யும் ரசாயனத்தை தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சனிக்கிழமை இரவு உற்பத்தி பொருள்களை சேமித்து வைக்கும் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலை முழுவதும் தீ பரவியுள்ளது.

இதுகுறித்து உடனடியாக ஸ்ரீபெரும்புதூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடா்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூா் தீயணைப்புத் துறையினா் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை சுமாா் 1 மணி நேரம் க போராடி அணைத்தனா்.

Advertisement

Advertisement

இருந்த போதிலும் தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த பல லடசம் மதிப்புள்ள உற்பத்தி பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments