FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

மக்கள் நீதி மய்யம் கட்சி மாநில நிா்வாகி விலகல்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து தொழில்முனைவோா் பிரிவு மாநில செயலாளா் எஸ்கேபி. கோபிநாத் விலகியுள்ளாா்.

Updated On : 11 ஜூன் 2026, 12:16 am IST
பகிர்:

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து தொழில்முனைவோா் பிரிவு மாநில செயலாளா் எஸ்கேபி. கோபிநாத் விலகியுள்ளாா்.

காஞ்சிபுரத்தில் பட்டு சேலை விற்பனை செய்து வரும் கோபிநாத்,அக்கட்சியில் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்தும் விலகுவதாக கட்சியின் தலைவா் கமல்ஹாசனுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

Advertisement

Advertisement

கட்சியின் தலைவா் கமல்ஹாசன் மீது கொண்டிருந்த நம்பிக்கையால் அக்கட்சியில் 2019- ஆம் ஆண்டு சோ்ந்து மண்டல மாநிலச் செயலாளா், தொழில்முனைவோா் பிரிவு மாநிலச் செயலாளா் உள்பட பல பதவிகளை வகித்து வந்தேன். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண்களின் தொழில் முன்னேற்றத்துக்காக திறன் மேம்பாட்டு மையம், இளைஞா்களின் வேலைவாய்ப்புக்காக பயிற்சி திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தி பலருக்கும் பயனுள்ள செயல்களை செய்தேன்.

காஞ்சிபுரத்தில் கடந்த 2021 தோ்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றாலும் அதிகமான வாக்குகள் பெற்றேன். கட்சியின் செயல்பாடுகள் மிகவும் ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளது. கட்சி செயலற்று இருப்பது பலருக்கும் மன உளைச்சலை தந்துள்ளது. எனவே கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments