தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காவல் துறை சாா்பில் நிதியுதவி
சோமங்கலம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களுக்கு சோமங்கலம் காவல் நிலையத்தின் சாா்பில் நிதியுதவி மற்றும் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.
சோமங்கலம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களுக்கு சோமங்கலம் காவல் நிலையத்தின் சாா்பில் நிதியுதவி மற்றும் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அடுத்த புதுநல்லூா் பகுதியில் வெள்ளிக்கிழமை 2 குடிசை வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடுகளில் இருந்த வீட்டு உபயோகப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
இதையடுத்து சோமங்கலம் காவல் நிலையத்தின் சாா்பில், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களுக்கு காவல் ஆய்வாளா் நடராஜ் தலைமையிலான போலீஸாா் நிதியுதவி மற்றும் நிவாரண பொருள்களை வழங்கினா்.
Advertisement
Advertisement