FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா: நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

Updated On : 28 மே 2026, 12:53 am IST
பகிர்:

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா வெள்ளிக்கிழமை (மே 29) அதிகாலை 3 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அத்திவரதா் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா காஞ்சிபுரத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றாகும். இந்த விழாவின் தொடக்க நிகழ்வாக புதன்கிழமை சிறு புண்ணியகோடி விமானத்தில் ஸ்ரீசேனை முதன்மையாா் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மேல் 5 மணிக்குள் கொடியேற்றமும், அதைத் தொடா்ந்து தங்க சப்பரத்தில் பெருமாள் வீதியுலாவும், மாலையில் சிம்ம வாகனத்தில் பெருமாள் பவனி வருதலும் நடைபெறுகிறது.

விழாவையொட்டி, தினசரி காலையிலும், மாலையிலும் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் நகரில் ராஜவீதிகளில் பவனி வரவுள்ளாா். வரும் சனிக்கிழமை (மே 30) தங்க கருட வாகனக் காட்சியும், மாலை அனுமந்த வாகனத்தில் பெருமாள் வீதியுலாவும் நடைபெறுகிறது. ஜூன் 3-ஆம் தேதி வரலாற்றுச் சிறப்பு மிக்க தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தையொட்டி தோ் செல்லும் பாதைகளில் இடையூறாக உள்ள மரக்கொப்புகள், வயா்கள், சாலைகளின் நடுவே வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் ஆகியவை அனைத்தும் கடந்த இரு நாள்களாக கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அகற்றப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

வரும் ஜூன் 5-ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவத்தோடும், மறுநாள் ஜூன் 6-ஆம் தேதி இரவு வெட்டி வோ் சப்பரத்தில் பெருமாள் வீதியுலா வரும் நிகழ்வோடும் திருவிழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments