காஞ்சிபுரத்தில் 104 கிலோ குட்கா பறிமுதல்: ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா் கைது
காஞ்சிபுரத்தில் 104 கிலோ குட்கா பறிமுதல்: ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா் கைது
ஆந்திர மாநிலத்திலிருந்து குட்கா கடத்தி வந்தவரை சனிக்கிழமை காஞ்சிபுரம் போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து 104 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்துள்ளனா்.
காஞ்சிபுரம் சாலைத் தெரு பகுதியில் சிவகாஞ்சி போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஆந்திர மாநிலத்திலிருந்து குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட பொருள்களை காரில் கடத்தி வந்தவரை நிறுத்தி சோதனையிட்டனா். காரில் 104 கிலோ குட்கா மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகள் இருந்தன. விசாரணையில், அவா் ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், கங்காதர நல்லூா் பட்டாபி ரெட்டி காலனி பகுதியைச் சோ்ந்த வேலுமணி (40) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்தனா்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.
Advertisement
Advertisement
சம்பவம் தொடா்பாக சிவகாஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.