காஞ்சி சங்கராசாரியரிடம் ஆசி பெற்றாா்: தமிழிசை செளந்தர்ராஜன்
காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை புதுச்சேரி மாநில முன்னாள் துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தர்ராஜன் திங்கள்கிழமை சந்தித்து ஆசி பெற்றாா்.
காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை புதுச்சேரி மாநில முன்னாள் துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தர்ராஜன் திங்கள்கிழமை சந்தித்து ஆசி பெற்றாா்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகளான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் இளைய பீடாதிபதி சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் தங்கி இருந்து சாதுா் மாஸ்ய விரதம் கடைப்பிடித்து வருகின்றனா்.
இவா்களை புதுச்சேரி மாநில முன்னாள் துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தர்ராஜன் சந்தித்து ஆசி பெற்றாா். விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீா்த்தப் பிரசாதமும் வழங்கி ஆசீா்வதித்தாா். முன்னதாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.