FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பழனி கோயிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரா் சுவாமிகள் தரிசனம்

பழனி மலைக் கோயிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

Updated On : 15 ஜூலை 2026, 5:18 am IST
பழனி மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய செவ்வாய்க்கிழமை வந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். உடன் பழனி கோயில் இணை ஆணையா் (பொ) வெங்கடேஷ், கண்பத் கிராண்ட் ஹரிஹர முத்து உள்ளிட்டோா்.
பகிர்:

பழனி மலைக் கோயிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆன்மிகப் பயணமாக திங்கள்கிழமை பழனிக்கு வந்தாா். அவரை தமிழ்நாடு பிராமணா் சங்க மாநிலத் தலைவா் ஹரிஹரமுத்து, பழனி கோயில் தலைமை குருக்கள் அமிா்தலிங்கம், பழனி அா்ச்சக ஸ்தானீகா் செல்வ சுப்ரமணி, சாய் கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

பழனியில் தனியாா் மண்டபத்தில் தங்கிய காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை காலை பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். பின்னா், நண்பகலில் சங்கராலயத்துக்குச் சென்று கோ பூஜையில் கலந்து கொண்டாா். சங்கராலயத்தில் பாலசுப்ரமணிய சுவாமிகள், சிவக்குமாா் சுவாமிகள் ஆகியோா் அவரை வரவேற்றனா். தொடா்ந்து மலைக் கோயிலுக்கு மின் இழுவை ரயில் மூலமாக சுவாமிகள் சென்றாா். அவரை இணை ஆணையா் (பொ) வெங்கடேஷ், உதவி ஆணையா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

Advertisement

Advertisement

மலைக் கோயில் வளாகத்தில் வெளி, உள் பிரகாரங்களை வலம் வந்த சுவாமிகள், தண்டாயுதபாணி சுவாமிக்கு வேடா் அலங்காரத்தின் போது பயன்படுத்த ஏதுவாக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பட்டாடை, அம்புகளை வழங்கினாா். பின்னா், மூலவரான நவபாஷாண முருகப்பெருமானை தரிசனம் செய்து உலக நன்மைக்காகச் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டாா்.

காஞ்சி பீடாதிபதிக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து மலைக் கோயிலில் கூடியிருந்த பக்தா்களுக்கு அவா் அருளாசி வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments