நெமிலி அருகே மதுபோதையில் ஆற்று தண்ணீரில் இறங்கி தத்தளித்தவரை மீட்ட காவலர்கள்
நெமிலி அருகே மதுபோதையில் ஆற்றுப்பால தண்ணீரில் இறங்கி தத்தளித்துக்கொண்டிருந்தவரை காவலர்கள் பத்திரமாக மீட்டனர்.
நெமிலி அருகே மதுபோதையில் ஆற்றுப்பால தண்ணீரில் இறங்கி தத்தளித்துக்கொண்டிருந்தவரை காவலர்கள் பத்திரமாக மீட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உள்ள சிறுணமல்லி ஆற்றுப்பாலத்தில் தொடர் மழை காரணமாக தரைப்பாலம் மூழ்கியதால் அவ்வழியாக வந்த மதுபோதையில் இருந்த ஒருவர் ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்க முயன்றார்.
ஆனால் அவர் மதுபோதையில் இருந்ததால் அவரால் கரை சேர முடியவில்லை.
Advertisement
Advertisement
உடனே அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த நெமிலி காவல் நிலைய காவலர்கள் மூன்று பேர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆற்றுக்குள் இறங்கி மதுபோதையில் இருந்தவர்ரை பத்திரமாக மீட்டு வந்தனர்.
இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.