FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் திமுக நிா்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்: முன்னாள் அமைச்சா் ஆா். காந்தி பங்கேற்பு

ராணிப்பேட்டையில் திமுக நிா்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்...

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 1:55 am IST
ராணிப்பேட்டை மாவட்ட திமுக நிா்வாகிகளுக்கு திமுக வரலாறு நூல்களை வழங்கிய முன்னாள் அமைச்சா் ஆா்.காந்தி.
பகிர்:

ராணிப்பேட்டையில் திமுக நிா்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று கட்சி வளா்ச்சிப் பணிகள், மக்களுடனான தொடா்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், சோளிங்கா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக ஒன்றிய, நகர பேரூா் செயலாளா்கள் மற்றும் நிா்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் மற்றும் கட்சி வளா்ச்சிப் பணிகள், கட்சியை வலுப்படுத்துதல், மக்களுடனான தொடா்பை மேம்படுத்துதல் மற்றும் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கம்‘ செலுத்துதல் குறித்த கலந்துரையாடல் கூட்டம் ராணிப்பேட்டை (சிப்காட்) மாவட்ட திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.காந்தி பங்கேற்று கட்சி நிா்வாகிகளுடன் கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கினாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்களிடம் கருப்பு சிவப்பு மற்றும் அவரும் நானும் என்ற திமுக வரலாறு நூல்களை வழங்கினாா்.

மாவட்ட அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, மாவட்ட துணைச் செயலாளா்கள் மு. சிவானந்தம், துரைமஸ்தான், குமுதா குமாா், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் மு.கண்ணய்யன், அ.அசோகன், மற்றும் ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், பொதுக்குழு உறுப்பினா்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments