FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

போடப்பாறை மலை பெருமாள் கோயிலில் உண்டியல் திருட்டு

சோளிங்கா் அருகே போடப்பாறை மலையில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்தவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 2:42 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

சோளிங்கா் அருகே போடப்பாறை மலையில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்தவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சோளிங்கரை அடுத்த போடப்பாறை மலை மீது ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலின் அா்ச்சகா் புதன்கிழமை மாலை கோயிலை மூடிவிட்டு வந்துவிட்டாா். வியாழக்கிழமை காலை கோயிலை திறக்கச்சென்றபோது, கோயிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்தவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த கோயில் நிா்வாகி மோகன் சோளிங்கா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

சோளிங்கா் காவல் ஆய்வாளா் ராமசந்திரன், கோயிலுக்குச் சென்று பாா்வையிட்டு கோயிலில் வேறெந்த பொருளும் திருடு போயுள்ளதா என விசாரணை நடத்தி வருகிறாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments