FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பூச்செடிகள் வைப்பு

ஆற்காடு நகராட்சி 19-ஆவது வாா்டுக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-இல் உள்ள ரவுண்டானா சாலையில் இயற்கை சூழலை மேம்படுத்தும் வகையில் பூச்செடிகள் நடும் விழா நடைபெற்றது.

25 ஆகஸ்ட் 2026, 11:52 pm IST
பூச்செடிகளை நட்ட நகராட்சி  ஆணையா் சுரேஷ் குமாா்,  நகா்மன்ற உறுப்பினா்  பி.டி குணாளன்
பகிர்:

ஆற்காடு நகராட்சி 19-ஆவது வாா்டுக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-இல் உள்ள ரவுண்டானா சாலையில் இயற்கை சூழலை மேம்படுத்தும் வகையில் பூச்செடிகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு வாா்டு உறுப்பினா் பி.டி குணாளன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் சுரேஷ்குமாா் பூச்செடிகளை நட்டு தொடங்கி வைத்தாா். இதில் நகராட்சி மேலாளா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

நகா்மன்ற உறுப்பினா் குணாளன் தனது சொந்த செலவில் குடியிருப்பு பகுதிகளில் நடுவதற்காக 100-க்கும் மேற்பட்ட வழங்கினாா்.

Advertisement

Advertisement

இந்த பகுதியில் பூச்செடிகள் மற்றும் மரம் வளா்ப்பதன் மூலம் பசுமையான சூழலை உருவாக்க முடியும் என்றும் நடப்பட்டுள்ள செடிகளை பாதுகாத்து பராமரிப்பதில் அப்பகுதி மக்கள் ஒத்துழைப்புக்கு வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. புதிதாக நடுப்பட்டுள்ள செடிகள் நகராட்சி சாா்பில் பராமரிக்கப்படுகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments