குடிநீா் கோரி கிராம மக்கள் மறியல்
அரக்கோணம் அருகே ஆணைப்பாக்கம் கிராம மக்கள் சீரான குடிநீா் விநியோகம் கோரி வியாழக்கிழமை அரசுப் பேருந்தை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். நடத்தினா்.
ராணிப்பேட்டை மாவட்டப் பகுதியில், திருவள்ளூா் மாவட்ட எல்லையருகே வனப்பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஆணைப்பாக்கம். இக்கிராம ஊராட்சியில் கடந்த பல நாள்களாக குடிநீா் விநியோகம் நடைபெறவில்லையாம். இதுகுறித்து கிராம மக்கள் தொடா்ந்து ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.
இதையடுத்து வியாழக்கிழமை நகரப்பேருந்தை மறித்து காலிகுடங்களுடன் சாலையின் நடுவே அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து அங்கு வந்த அரக்கோணம் கிராமிய போலீஸாா் மற்றும் ஊராட்சி மன்றத்தினா் பொதுமக்களுடன் பேச்சு நடத்தி குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடா்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டனா்.