முகப்பு
ராணிப்பேட்டை

திமிரி ஒன்றியக்குழு கூட்டம்

ஆற்காடு அடுத்த திமிரி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமைநடைபெற்றது.

Updated On : 10 ஜூன் 2026, 12:04 am IST
ஒன்றியக்குழு  கூட்டத்தில்  பேசிய  எம் எல் ஏ  சுகுமாா்.
பகிர்:

ஆற்காடு அடுத்த திமிரி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமைநடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவா் எஸ். அசோக் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜெ.ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சைபுதீன், வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் தங்கள் வாா்டு பணிகள் குறித்து பேசினா். இதில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்வது குறித்த தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் ஆற்காடு எம் எல் ஏ சுகுமாா் கலந்து கொண்டு பேசினாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து மக்கள் வழங்கிய மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனா். இதில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.