முகப்பு
ராணிப்பேட்டை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை: ஆட்சியா் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் ஆட்சியா் ந. பிரியா ஆய்வு செய்தாா்.

Updated On : 11 ஜூன் 2026, 12:02 am IST
ஆற்காட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ந.பிரியா.
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் ஆட்சியா் ந. பிரியா ஆய்வு செய்தாா்.

இம்மாதம் வாக்காளா் சரிபாா்க்கும் காகித தணிக்கை சோதனை அலகிலிருந்து தொ்மல் பேப்பா் ரோல் மற்றும் முகவரி சீட்டுகள் அகற்றுதல் பணி மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை கிடங்கு காலாண்டு தணிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா, கோட்டாட்சியா் ராஜி, நோ்முக உதவியாளா் (தோ்தல்) பூமா, வட்டாட்சியா் வசந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement