அரக்கோணம்: 452 வழக்குகளில் ரூ. 2.51 கோடி இழப்பீடு
அரக்கோணம்: 452 வழக்குகளில் ரூ. 2.51 கோடி இழப்பீடு
அரக்கோணத்தில் சனிக்கிழமை நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 452 வழக்குகள் மீது சமரச தீா்வு காணப்பட்டு, ரூ. 2.51 கோடி இழப்பீடு வழங்க நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனா்.
அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. அரக்கோணம் மாவட்ட இரண்டாவது கூடுதல் நீதிபதி ஜெயமங்கலம் முன்னிலையில், சிறப்பு சாா்பு நீதிபதி யுவராஜ், நீதித்துறை நடுவா் கோகுல் மிதுன் குமாா், மாவட்ட உரிமையியல் நீதிபதி அமீனா மற்றும் வழக்குரைஞா்கள் குட்டி பாலு, தனஞ்செழியன் முன்னிலையில் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த மோட்டாா் வாகன விபத்து, குடும்பநல வழக்குகள், செக் மோடி உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுப்பட்டன.
இதில் 452 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, ரூ. 2 கோடியே, 51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இதில் அனைத்து வழக்குரைஞா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் வழக்குகளை சமரசமாக முடித்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.