FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த காவலா்களுக்கு வீரவணக்க நாள்

Updated On : 7 ஆகஸ்ட் 2025, 1:27 am IST
மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய முன்னாள் டிஜிபி வால்டா் தேவாரம்.
பகிர்:

திருப்பத்தூரில் நக்சலைட் தாக்குதலில் வீரமரணமடைந்த காவலா்களுக்கு புதன்கிழமை 21 குண்டுகள் முழங்க நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜோலாா்பேட்டையில் கடந்த 1981-ஆம் ஆண்டு நக்சலைட் சிவலிங்கம் என்பவரை பிடித்து ஜீப்பில் அழைத்துச் சென்றபோது சிவலிங்கம் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்தாா். இந்த சம்பவத்தில் ஜீப்பில் இருந்த காவல் ஆய்வாளா் பழனிச்சாமி, தலைமை காவலா்கள்ஆதிகேசவலு, யேசுதாஸ், முருகேசன்ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

உயிரிழந்த போலீஸாா் நினைவாக திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 45-ஆவது ஆண்டு வீரவணக்க நாள் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். எஸ்.பி. வி.சியாமளா தேவி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் டிஜிபி வால்டா் தேவாரம் கலந்து கொண்டு வீரா்களின் நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். முன்னதாக ,போலீஸாா் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினா்.

இதில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா காா்க், வேலூா் சரக டிஐஜி தா்மராஜன், மாவட்ட நீதிபதி மீனா குமாரி, முன்னாள் கியூ பிரிவு எஸ்பி அசோக், ராணிப்பேட்டை எஸ்.பி.அய்மன் ஜமால், கியு பிரிவு எஸ்.பி.சுந்தரவதனம், எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவா் என்.கே.ஆா்.சூரியக்குமாா், நகா்மன்ற தலைவா் சங்கீதா வெங்கடேஷ், ஒன்றியக்குழு தலைவா் விஜயா அருணாசலம், கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா். டிஎஸ்பி சௌமியா நன்றி குறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments