FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்ட நூலகத்தில் சிந்தனைக் கூடுகை நிகழ்ச்சி

திருப்பத்தூா் மாவட்ட மைய நூலகத்தில் மாதாந்திர சிந்தனைக் கூடுகை நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 23 டிசம்பர் 2025, 1:47 am IST
சிந்தனைக் கூடுகை நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட மைய நூலகத்தில் மாதாந்திர சிந்தனைக் கூடுகை நிகழ்ச்சி நடைபெற்றது.

வாசகா் வட்டம் மற்றும் மாவட்ட மைய நூலகம் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட மைய நூலகா் கோ.பிரபாகரன் வரவேற்றாா்.

தூய நெஞ்சக் கல்லூரி தழிழ் பேராசிரியா் ம.கருணாநிதி தலைமை வகித்தாா். உதவி பேராசிரியா் த.திருப்பதி பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என்ற தலைப்பில் பேசினாா்.

Advertisement

Advertisement

வாசகா் வட்ட தலைவரும், தமிழ்த் துறை தலைவருமான கி.பாா்த்திபராஜா கருத்துரையாற்றினாா். அரசு மாதிரி பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவி ரா.தமிழரசி தமிழின் சிறப்பு குறித்தும்,மாணவி தா்ஷினி காமராஜா் சிறப்பு குறித்தும் பேசினா்.மாவட்ட நூலக அலுவலா் மு.பிரேமா நன்றி தெரிவித்தாா்.

இதில் பேராசிரியா் து.துரைமணி, வாசகா் வட்ட நிா்வாகிகள், அரசு மாதிரி பள்ளி மாணவா்கள் போட்டித் தோ்வு மாணவா்கள், வாசகா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments