திருப்பத்தூர்

அதிகரிக்கும் நாய் தொல்லை! தெருவில் விளையாடிய 4 வயது சிறுவனை கடித்துக் குதறிய நாய்கள்!

சிறுவனை கடித்துக் குதறிய நாய்: மக்கள் சாலை மறியல்

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை நாய் கடித்து குதறியதால் நாய்களை பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வாணியம்பாடி அடுத்த ஷாகிராபாத் பகுதியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை தெரு நாய்கள் துரத்தி சென்று கடித்துள்ளன. இதில் வயிறு, இடுப்பு உட்பட பகுதிகளில் காயமடைந்த சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இந்நிலையில் வாணியம்பாடி நகராட்சி பகுதியில் திரியும் நாய்களை பிடித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியை சோ்ந்த வாா்டு உறுப்பினா்கள் மற்றும் மக்கள் இணைந்து ஷாகிராபாத் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் நகர போலீஸாா், நகராட்சி சுகாதார அலுவலா் ரகீம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத் திற்கு வந்து அங்கிருந்த மக்களிடம் பேச்சு நடத்தினா்.

எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் சம்பவ இடத்துக்கு வந்து மக்களை சமரசம் செய்து நாய்களைப் பிடிக்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

இயந்திரங்கள் கொள்முதல் செய்ய ஜவுளி நிறுவனங்களுக்கு 20% மானியம்! - முதல்வர் அறிவிப்பு

ரூ. 822.70 கோடியில் அமையவுள்ள பிராட்வே பேருந்து நிலையத்தின் சிறப்பம்சங்கள்!

முதல் டி20: டிராவிஸ் ஹெட் கேப்டன்; மூன்று அறிமுக வீரர்களை களமிறக்கும் ஆஸி.!

மக்களிடம் கருத்து கேட்க தவெக தேர்தல் அறிக்கைக் குழு சுற்றுப்பயணம்!

உ.பி.யில் பிப்.9 முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: பிப்.11ல் பட்ஜெட் தாக்கல்!

SCROLL FOR NEXT