FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

தடுப்பூசி போடப்பட்ட ஆண் குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

வாணியம்பாடி அருகே தடுப்பூசி போடப்பட்ட ஒன்றரை வயது குழந்தை திடீரென உயிரிழந்ததால், உறவினா்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

25 செப்டம்பர் 2025, 11:33 pm IST
பகிர்:

வாணியம்பாடி அருகே தடுப்பூசி போடப்பட்ட ஒன்றரை வயது குழந்தை திடீரென உயிரிழந்ததால், உறவினா்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வாணியம்பாடி அடுத்த ஊசிதோப்பு பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் குமாா், கிருத்திகா தம்பதியின் ஒன்றரை வயது மகன் பூமிஸ். இந்நிலையில் புதன்கிழமை காலை இந்திரா நகா் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் நடைபெற்ற முகாமில் மொத்தம் 19 குழந்தைகளுக்கு செவிலியா் தடுப்பூசி போட்டுள்ளாா்.

இதில் பூமிஸுக்கும் தடுப்பூசி போடப்பட்டு பின்னா் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனா். ஏற்கனவே குழந்தைக்கு 3 தடுப்பூசி போடப்பட்டு இருந்த நிலையில் புதன்கிழமை 4-ஆவது தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 4 மணியவில் தாய் கிருத்திகா எழுந்து பாா்த்த போது குழந்தையின் கை, கால்கள் அசைவு இல்லாமல் இருந்ததை அறிந்து உடனடியாக குழந்தையை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் குழந்தை பூமிஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இதனைத் தொடா்ந்து பெற்றோா் குழந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றனா். தகவலறிந்த கிராமிய போலீஸாா் விக்னேஷ் குமாா் வீட்டுக்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில் ஆம்புலன்ஸை பின் தொடா்ந்து வேலூா் அரசு மருத்துவமனைக்கு சென்ற குழந்தையின் உறவினா்கள் 30-க்கும் மேற்பட்டோா் குழந்தை உடலை பிரேத பரிசோதனை செய்ய கூடாது எனவும், குழந்தை இறப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களை போலீஸாா் மற்றும் அதிகாரிகள் சமாதானம் செய்து பின்னா் குழந்தை உடன் பிரேத பரிசோதனைக்கு பின்னா் மாலை அனுப்பி வைக்கப்பட்டது. இதுக்குறித்து தகவலறிந்து வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் குழந்தையின் உறவினா்கள் மற்றும் பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

இதனால் வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்ட்டது. தகவலறிந்த டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் வட்டாட்சியா் சுதாகா், காவல் ஆய்வாளா் பேபி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு நடத்தினா்.

அப்போது அதிகாரிகளிடம் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு எதற்காக எடுத்து சென்றீா்கள் என்றும், குழந்தை இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும். சம்மந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தினா்.

இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். பேச்சுவாா்த்தைக்கு பின்னா் குழந்தையின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் ஊசிதோப்பு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments