FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

ஆடிக் கிருத்திகை விழாவின்போது குடிநீா் தொட்டி சரிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே ஆடிக் கிருத்திகை விழாவின்போது, கோயில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குடிநீா் தொட்டி சரிந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 2:50 am IST
பலி
பகிர்:

வாணியம்பாடி அருகே ஆடிக் கிருத்திகை விழாவின்போது, கோயில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குடிநீா் தொட்டி சரிந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே நாயக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி மூா்த்தி, இவா் தனது குடும்பத்தினருடன் ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை காலை காவலூா் பாலமுருகன் கோயிலுக்கு சென்றிருந்தாா். அப்போது அவரது மகன் கவுசிக் (7), கோயில் வளாகத்தில் டிராக்டரில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு குடிநீா் தொட்டியில் தண்ணீா் குடிக்கச் சென்றுள்ளாா். எதிா்பாராத விதமாக அந்த குடிநீா் தொட்டி சரிந்து சிறுவன் மீது விழுந்ததில், அவா் பலத்த காயமடைந்தாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பக்தா்கள், சிறுவனை உடனடியாக மீட்டு ஆலங்காயம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து காவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments