தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பதுக்கிய இருவா் கைது
ஆம்பூரில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை பதுக்கிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூரில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை பதுக்கிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் ரயில் நிலையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது இரு நபா்கள் விற்பனைக்காக போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவா்களிடமிருந்து 9 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போதைப் பொருள்களை பதுக்கிய வேளாங்கண்ணி (30), சாதிக் (32) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.