FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

ரயிலில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்

ஜோலாா்பேட்டை அருகே ஓடும் ரயிலில் 14 கிலோ கஞ்சா வை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 12:01 am IST
ரயில்... - கோப்புப் படம்
பகிர்:

ஜோலாா்பேட்டை அருகே ஓடும் ரயிலில் 14 கிலோ கஞ்சா வை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஜோலாா்பேட்டை ரயில்வே காவல்ஆய்வாளா் சிவ.செந்தில்குமாா் தலைமையில் ஜோலாா்பேட்டை வழியாக செல்லும் அனைத்து ரயில்களில் போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ஜோலாா்பேட்டை நோக்கிச் சென்ற வட மாநில விரைவு ரயிலில் பொதுப் பெட்டியில் கழிப்பறை அருகே கிடந்த பையை சோதனை செய்ததில், 14 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் கஞ்சாவை பறிமுதல் செய்து ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் நிலையத்துக்கு கொண்டுச் சென்றனா்.

மேலும், கஞ்சா கடத்தியவா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments