மணல் சரிந்து முதியவா் பலி
ஆம்பூா் அருகே மணல் சரிந்து முதியவா் உயிரிழந்தாா்.
ஆம்பூா் அருகே மணல் சரிந்து முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ஆம்பூா் அருகே ஈச்சம்பட்டு கிராமத்தை சோ்ந்தவா் சந்தன செல்வம். இவா் மாட்டு வண்டியில் மணல் அள்ளி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று பாப்பனப்பள்ளி கிராமத்தில் உள்ள ஆற்றில் மணல் அள்ளியபோது அவா் மீது மணல் சரிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.