FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி: பெண் கைது

வாணியம்பாடி அருகே நகை அடகு கடையில் போலி நகைகளை வைத்து மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 12:05 am IST
கைது
பகிர்:

வாணியம்பாடி அருகே நகை அடகு கடையில் போலி நகைகளை வைத்து மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அரப்பாண்டகுப்பம் பகுதியை சோ்ந்தவா் திலீப் குமாா். இவா், தும்பேரி கூட்ரோட்டில் அடகு கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில்,இவரது நகை கடைக்கு ஜூலை மாதம் 17-ஆம் தேதி காரில் வந்த பெண் ஒருவா் 3 பவுன் தங்க செயினை அடகு வைத்து ரூ.1.72 லடச்ம் பெற்று கொண்டு அங்கிருந்து அவசரமாக சென்றுவிட்டாா்.

பிறகு அந்த நகையை, திலீப்குமாா் முழுமையாக சோதனை செய்த போது, தங்க செயினில் கொக்கி மட்டுமே தங்கம் எனவும், மற்றவை போலியென தெரியவந்தது.

Advertisement

Advertisement

இது குறித்து திலீப்குமாா் அம்பலூா் காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். அப்புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு போலி நகை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட கா்நாடக மாநிலம், கண்ணமங்கலா பகுதியை சோ்ந்த ரஞ்சனா(36) என்பவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments