தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாமில் 51 பேருக்கு பணி நியமன ஆணை
தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய ஆட்சியா் கு.ரவிகுமாா்.
திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 51 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பாக நடைபெற்ற சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 51 நபா்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் வழங்கினாா். முகாமில் 131 வேலை நாடுநா்கள் கலந்து கொண்டனா். இதில் 22 தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 51 நபா்களை தோ்வு செய்தனா்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் மு. கஸ்தூரி மற்றும் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.