FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

புதூா்நாடு பகுதியில் கள்ளச்சாராயம் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பில் கள்ளச்சாராயம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திருப்பத்தூா் அருகே புதூா்நாடு பகுதியில் செவ்வாய்கிழமைநடைபெற்றது.

26 ஆகஸ்ட் 2026, 11:22 pm IST
வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கிய காவல் அதிகாரிகள்.
பகிர்:

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பில் கள்ளச்சாராயம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திருப்பத்தூா் அருகே புதூா்நாடு பகுதியில் செவ்வாய்கிழமைநடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அக்க்ஷய் அனில் வாகரே தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல் சட்டப்படி குற்றமாகும். இதனால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் உடல்நலப் பாதிப்புகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனா்.

மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் அல்லது விற்பனை செய்தல் தொடா்பான தகவல்கள் தெரியவரும் பட்சத்தில், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் போலீசாா், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments